கூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..!

ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன.
வெகு காலமாக கணினித் துறைக்கு இது சவாலாகவே இருந்து வந்தது. காரணம், சிலருக்கு 5 வயது போட்டோவை 25 வயதில் எடுத்துப் பார்த்தாலே சம்பந்தமே இல்லாத யாரோ போல் தோன்றும். வேறு சிலருக்கோ 5 வயதில் இருக்கும் முகம் 50 வயதிலும் அப்படியே இருக்கும். யாருடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும் என்றுதான் இத்தனை நாட்களாக நினைத்திருந்தோம். ஆனால், இந்த ஆராய்ச்சி அந்த மாயையை உடைத்துவிட்டது.
குழந்தையின் கண், மூக்கு, காது, உதடு போன்றவை எந்த வடிவத்தில் இருந்தால் அது காலப் போக்கில் மாறும். எந்த வடிவத்தில் இருந்தால் காலத்தால் மாறாதிருக்கும் என்ற பொது விதியை நாங்கள் கண்டறிந்து விட்டோம் என ஆய்வுக்குத் தலைமை ஏற்றிருக்கும் வோஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியை கெமல்மெசர் தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான மனிதர்களின் சிறு வயதுப் புகைப்படங்களை சேகரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வயதிலும் ஒரே மாதிரியாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து வைத்திருப்பவர்களைத் தேடிப் பிடித்திருக்கிறார்கள். அந்தப் படங்களைத் துல்லியமாக ஆராய்ந்ததன் மூலம், ஒரு மனிதனின் முகத்தில் வயது ஏற்படுத்தும் மாற்றங்களை வரையறுக்க முடிந்திருக்கிறது. அந்த மாற்றங்கள் ஆணுக்கு வேறு பெண்ணுக்கு வேறு மாதிரி இருக்கும் என்பதும் தெளிவாகி இருந்திருக்கிறது.
அந்த இலக்கணங்களை கணினி கட்டளைகளாக்கித்தான் இந்த மென்பொருளை உருவாக்கியிருக்கிறோம். தற்போது இந்த மென்பொருளில் 6 வயதுப் பையனின் புகைப்படத்தை உள்ளீடு செய்தால், அவன் முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என்றெல்லாம் 30 விநாடிகளில் காட்டி விடுகிறது. இதுவரை வயோதிப மாற்றங்களை இவ்வளவு துல்லியமாக எந்த மென்பொருளும் காட்டியதில்லை. எனப் பெருமிதம் கொள்கிறார் கெமல்மெசர். இந்த நம்பிக்கை இவர்களுக்கு தானாக வரவில்லை. இன்றைய வயோதிபர் ஒருவரின் சிறு வயது போட்டோவை இந்த மென்பொருளில் இட்டு சோதித்திருக்கிறார்கள்.
மென்பொருள் தந்த வயோதிக முடிவு சரியாக அந்தத் வயோதிபரின் சமீபத்திய போட்டோ போலவே இருந்திருக்கிறது. மக்களின் இந்த ஆர்வம் தெரிந்துதான் இணையத்தின் இமயமான கூகுள் நிறுவனமும் இன்டெல் நிறுவனமும் இந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்திருக்கின்றன. கூடிய சீக்கிரமே இது கூகுள் தேடுபொறியோடு இணைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரலாம்! இப்படியே வளர்ந்துகிட்டுப் போனா, இன்னும் 80 வருடத்தில் நம்ம உலகம் எப்படி இருக்கும்.

ஆங்கிலத்தில் பேசினால் தமிழ் மொழியில் கேட்கும்; ஸ்கைப்-ல் புதிய வசதி அறிமுகம்

சாஃப்ட்வேர் துறையில் முன்னனி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப் சாஃப்ட்வேரில், எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து, அவர் தேர்வு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்துயுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான சோதனை முயற்சிகள் பிப்ரவரியில் இருந்தே நடைபெற்று வந்து தற்போது டெமோ வெர்ஷன் வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை மைக்ரோசாஃப்ட் சிஇஓ ஆங்கிலத்தில் பேசி எதிர்முனையில் ஜெர்மன் மொழியில் கேட்டு டெமோ வெர்ஷனை துவக்கி வைத்தனர். இனி பேசுவதற்கு மொழி ஒரு தடையில்லை என்ற சூழலை மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ளது.

இலவச வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் (கற்றுக்கொள்வது எளிது)

மிக எளிதாக Video Editing  செய்யப் பயன்படும் மென்பொருள் இது. இதன் இடைமுகம் – Interface சாதாரணமானவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்ரீதியான வீடியோ எடிட்டிங் – Professional video Editing செய்திடும் வகையில் பல்வேறு விதமான சிறப்பம்சங்களை – Featured Effects இம்மென்பொருள் கொண்டுள்ளது.
மூவி மேக்கிங் – Movie Making  என்பது அவ்வளவு சுலபமானதல்ல. மூவி மேக்கிங் மிக எளிமையாக செய்து முடிப்பதற்கு இம்மென்பொருள் எளிமையான வசதிகளைக் கொண்டுள்ளது.
VideoPAD Video Editing Software Features and Specifications
  •     வீடியோக்களை Drop and Drag செய்து எடிட் செய்திடும் வசதி
  •     Transition மற்றும் வீடியோ எஃபக்ட்களை கொடுக்கும் வசதி அத்துடன் வீடியோவின் வேகத்தை சரிசெய்யும் வசதி என அதிக வசதிகளை இம்மென்பொருள் பெற்றிருக்கிறது.
  •      avi, wmv,mpv and divx போன்ற எந்த ஒரு பார்மட்டிலிருப்பினும் எடிட் செய்யும் வசதி
  •     50 க்கும் மேற்பட்ட  visual மற்றும் transition effects கொடுக்கும் வசதி.
  •     TV போன்ற சாதனங்களில் வீடியோக்களை பார்ப்பதற்கு DVD Burn செய்யும் வசதி
  •     Sound Effect மற்றும் ஆடியோ டிராக் பதிவு செய்யும் வசதி, Audio Effect கொடுக்கும் வசதி
  •     வீடியோவை HD ஆக எக்ஸ்போர்ட் செய்யும் வசதி, Youtube போன்ற தளங்களில் வீடியோக்கள் பதிவேற்றும் வசதி என பல்வேறுவிதமான வசதிகளை உள்ளடக்கியது இம்மென்பொருள்.
http://www.nchsoftware.com/videopad/

உங்கள் கம்ப்யூட்டர்-யை ‘டச் ஸ்கிரீன்’-ஆக மாற்ற ஆசையா? – புதிய பென் கருவி (வீடியோ)

சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சாதாரண non-touch screen laptop அல்லது Desktop Computer-களை தொடுதிரையாக மாற்றுவதற்கான கருவி ஒன்றை Portronics என்ற நிறுவனம் Handmate Digital Pen என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் சாதாரண கம்ப்யூட்டர் திரையை , Touch Screen ஆக மிக எளிதல் மாற்றிக் கொள்ளலாம்.  விண்டோஸ் 8 இயங்குதளத்தின் முழுமையான பயன்பாட்டை நீங்கள் பெற வேண்டுமெனில், இந்த Handamte விண்டோஸ் 8 பேனா நிச்சயமாக பொருத்தமான கருவியாகும்.
விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இச்சாதனத்தைப் பொருத்தி செயல்படுத்திட முடியும்.
இதில் Infrared and Ultrasound டெக்னாலஜி, ரிசீவிங் யூனிட் மற்றும் அல்ட்ராசோனிக் டிஜிட்டல் ஸ்டைலஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான non-touch லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரைகளை Touch Enable Screen ஆக மாற்றக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனம் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் கணினியில் நிறுவப்பட்ட அனைத்து மென்பொருள்களிலும் செயல்படுத்த முடியும். 
இந்த கருவியின் சிறப்பம்சங்கள்:
1. Plug & Play, turn your existing PC to touch as easy as 1-2-3.
2. Cost-effective accessory, much better than buy an expensive touch screen laptop.
3. Slide, swap, drag to operate.
4. View Web &mail, zoom in & zoom out pictures, playing games, annotate on office document freely
5. Activate all software icons with a simple touch like it happens on Tablets
6. Slide, swap, drag to operate
7. Uses Ultrasonic and Infrared Technologies
8. Ultra simple user experience
கருவின் தொழிநுட்ப விபரங்கள்
Technology: Ultrasonic and Infrared
Coverage area: up to17″(MAX)
Resolution: 100 DPI
Accuracy: 0.2mm
Communication: USB 2.0 Full Speed , USB Cable
Power Source: Pen: 2 x SR41 batteries
Pen Battery Life Time:500 hours of continues writing/hovering.(The ratio of the pen’s working and standby time is 1:9 )
Note: Lifetime of the batteries may vary and cannot be guaranteed
Standards: FCC/CE
Platform Support:
Windows® 8
Sampling rate:58 samples/second
Power consumption:
Operating Temperature: +10°c to +35°c.
Storage Temperature: -10°c to + 50°c.
Operation Relative Humidity Range: 20% – 80 % (40°c).
Storage Relative Humidity Range: 20% – 80 % (40°c).
Size: L * W * H: 68.01*26.32*7.70 (mm)
Weight: about 9gr.
Color: Black

உங்கள் பேஸ்புக் பக்கத்தை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி? (வீடியோ)

உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார்? யார்? பார்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு எளிமையாக ஒரு வழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே கூறியதை பின்பற்றவும்…
முதலில் உங்களுடைய முகநூல் கணக்கில்(facebook account) நுழையுங்கள் (login). பிறகு உங்களுடைய முகநூல் பக்கத்திற்கு (your profile page) செல்லுங்கள்.
அதன்பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option-யை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும். இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும்.
அந்த Search Bar இல்  {“list” அல்லது friendslist என்று Type செய்து Enter செய்யவும். நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும். இது மாதிரி {“list””1000011345400-2″, “10000043254566-3″  என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும்.
அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய பேஸ்புக் கணக்கு எண் (fecebook account number) ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு. மேலும் அதன் அருகில் உள்ள  -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கை.
இப்பொழுது new tab-ல் www.facebook.com/ என்று type செய்து அதன் அருகில்  fecebook account number-யை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
இதுமாதிரி ” www.facebook.com/1000011345400
இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile-யை நோட்டமிட்டவரின் profile ஓபன் ஆகும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile-யை பார்த்து உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும்.

ஆன்டி-வைரஸ் மென்பொருட்கள் இல்லாமல் வைரஸ்களை நீக்கும் எளிய வழி..!

பெரும்பாலனவர்கள் தகவல்களை சேமிக்கும் பொருளாக USB DISK என்று சொல்லக்கூடிய பென்டிரைவ் தான் பயன்படுத்துவார்கள். இதில் அவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்வார்கள்.
இதில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை வைரஸ். அதுவும் பென் டிரைவ் என்றாலே சீக்கரம் வந்து ஒட்டிக்கொள்ளும் இந்த கெடுதல் செய்யும் புரோக்ராம். இதனால் நமது தகவல்களை நாம் பார்க்க முடியாமல் போய்விடலாம்.  நம் வைத்திருக்கும் போல்டர்கள் காணாமல் போய்விடக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.
இந்த வைரஸ்களை நீக்க கணினியில் ஆன்டி-வைரஸ் மென்பொருட்கள் இல்லாமல் போகும். எனவே இது போன்ற அவசர காலங்களில் எந்த வித மென்பொருட்களும் இல்லாமல் வைரஸ்களை நீக்க ஒரு எளிய வழி உள்ளது.
இதை ஏற்கனவே பல இடங்களில் நிறைய பேர் படித்திருப்பீர்கள். ஆனாலும் சிலருக்கு இன்னும் இந்த விஷயம் தெரியாமல் இருக்கும் அவர்கள் தெரிந்து கொள்ளத் தான் இந்த பதிவு…!
பழுதான பென்ட்ரைவ்வை உங்கள் கணினியில் இணையுங்கள்.  பென்டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்பதை நீங்கள் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். அதாவது, G:  அல்லது வேறெந்த டிரைவில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு,
உங்கள் கணினியில் START+R அழுத்துங்கள். கீழே RUN சிறிய பாக்ஸ் ஓபன் ஆகும். அதில் CMD என டைப் செய்து Enter தட்டுங்கள்.
g driveஇப்பொழுது comment prompt என்ற விண்டோ தோன்றும், அதில் உங்கள் பென்டிரைவ் எந்த ட்ரைவ் லொக்கேசனில் உள்ளதோ அந்த ட்ரைவின் லெட்டருடன் கோலன் சேர்க்கவேண்டும். உதாரணம் உங்கள் பென்ட்ரைவ் G என்ற ட்ரைவில் இருந்தால் G:என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்.
பிறகு attrib -r -a -s -h *.* இந்த வார்த்தையை சரியான இடைவெளியில் (space) கொடுத்து என்டர் செய்யுங்கள்.
ஒரு சில வினாடிகளில் உங்கள் பென்டிரைவில் அனைத்து கோப்புகளும் மீட்கப்பட்டிருக்கும். மீண்டும் உங்கள் பென்ட்ரைவ்யை ஓபன் செய்து கோப்பைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
சரியாக புரியாதவர்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க

செல்போன்களை செயற்கைக்கோள் போன்களாக மாற்றலாம்; சிக்னல் இல்லாத இடத்திலும் பேசலாம்

செல்போன்கள் நவீன வடிவம் பெறுவதுபோலவே, அதன் செயல்பாட்டு வேகமும் அதிரடியாக அதிகரிக்கப்போகிறது. நகரத்தை கடந்தால் பாதியாக குறைந்துவிடும் நெட்வொர்க் இணைப்புகள், காற்று வேகமாக அடித்தால் தொடர்பிழக்கும் இணைப்புகள் போன்ற பிரச்சினைகள் இனி இல்லை. மலைப்பிரதேசம், கடல்பயணங்களில் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் மாறப்போகிறது. ‘நெட்வொர்க்’ டவர் மூலம் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள்களின் வழியாக இணைப்பு கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது ஒரு கருவி.
ரஷியாவைச் சேர்ந்த ‘யாழினி’ செல்போன் நிறுவனம் இதற்காக ‘யாழினி பாயிண்ட்’ என்ற கருவியை வடிவமைத்துள்ளது. பெரிய செல்போன் அளவில் காணப்படும் இந்தக் கருவி எல்லா ஸ்மார்ட்போன்களையும் செயற்கைகோள் போன்களாக செயல்படச் செய்கிறது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் இதற்கான அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் இந்த கருவி செயல்படத் தொடங்கிவிடும்.
இதற்கென தனியாக சிறிய செயற்கைகோளையும் இந்த நிறுவனம் விண்ணில் செலுத்தி உள்ளது. இதன்வழியே வினாடிக்கு 2 ஜி.பி. வேகத்தில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும். இதுபோன்ற மற்றொரு கருவி அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் மென்பொருளில் பேசும் வசதி அறிமுகம்; பேஸ்புக் அதிரடி அறிவிப்பு

மொபைல் தொழில்நுட்ப சேவையான வாட்ஸ்ஆப்பிற்கு 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாட்ஸ்ஆப்பின் அசுர வளர்ச்சியை கண்டு அதை பேஸ்புக் நிறுவனமே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த சில மதங்களுக்கு முன் இந்த நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை வாட்ஸ்ஆப்பில், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன.
லைன், வைபர், டாங்கோ போன்ற மென்பொருள்களில் உள்ள பேசும் வசதி வாட்ஸ்ஆப்பில் இல்லை என்பது ஒரு குறையாவாக வாடிக்கையாளர் மத்தியில் நிலவியது. எனவே அந்த குறையை போக்கும் விதமாக வரும் ஜூன் மாதம் முதல் வாட்ஸ்ஆப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு, படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும். தற்போது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். பேசிக்கொள்ள முடியாது.

இன்டர்நெட் இல்லாமல் முகநூலை பயன்படுத்தலாம்; Bsnl-ன் புதிய திட்டம்

இணையதள இணைப்புக்கு செலவழிக்காமலே சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பயன்படுத்தும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வசதிக்கு இன்டர்நெட் அவசியம் இல்லை, இதன் மூலம் முகநூல் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், இந்த வசதியை 3ஜி வேகத்திற்கே நாம் பயன் படுத்திக்கொள்ளலாம். ஆனால், இந்த வசதியை உங்கள் மொபைல்களில் பெற கட்டணங்கள் செலுத்த வேண்டும்.
ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கென 3 நாட்களுக்கு 4 ரூபாயும், ஒரு வாரத்துக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிகின்றது. மேலும் 20 ரூபாய் செலுத்தினால் ஒரு மாதத்துக்கு ஃபேஸ்புக் பயன்படுத்தலாம் என்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

பணம் இல்லாமல் இலவசமாக போன் செய்யவது எப்படி..?; புதிய சேவை அறிமுகம்

சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும் ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது.  ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டிருப்போம். இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டுவாங்குவோம்..
இனி அந்த நிலை ஏற்படாது. பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர்.
இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால் செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black & white Nokia போன் போதும்..
ஐபோன் (iphone) முதல் சாதாரண சைனா போன் வரை அனைத்திலும் இது வேலை செய்யும். ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மை தான். இந்த சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக போன் செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற Toll Free நம்பருக்கு போன் செய்ய வேண்டும்(இந்திய எண்ணிலிருந்து). இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்படமாட்டாது.
நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட் ஆகிவிடும். கட் ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில் இருந்து நமது போனிற்கு (mobile) கால் வரும். அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களது நம்பரை (phone number) dial செய்து அவர்களுடன்  இலவசமாக பேசிக் கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா ? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம் தான் பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை share செய்யுங்கள்
பின் வரும் FREEKALL சேவை இணையதளத்திற்கு சென்று உங்கள் மொபைல்  நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள் இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக போன் செய்யலாம். DND நம்பர்களுக்கும் இது வேலை செய்யும்.
ஆங்கிலத்தில் சுருக்கமாக:
One can make the use of this service by following way: freekall.in
1. Call at 1800 108 4444 after which the call will drop.
2. You will receive a call on your number from 08067915000.
3. Pick up the call and dial the number on which you want to talk and you will be connected to that number.

USB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை எந்த சாதனமும் இன்றி பகிர்வது எப்படி ?

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.
இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என அல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்
கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்துந்து கொள்ளலாம்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்
Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
http://virtualrouter.codeplex.com
2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்
hvjv
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும்.
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் கணிணியில் wifi enable ஆக இருக்க வேண்டும்.
இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள எங்களுடைய சமுகவலைதள பட்டன்களை அழுத்தி பின் தொடருங்களேன்.