பிரதோஷ வழிபாடு நடத்தும் ஒவ்வொரு கிழமைகளின் பலன்கள் இவையென்று சைவ அறிஞர்கள் கூறுகிறார்கள்:
1.) ஞாயிறு பிரதோஷம் சுப மங்களத்தை தரும்.
2.) திங்கள் சோம பிரதோஷம் நல்எண்ணம், நல்அருள் தரும்.
3.) செவ்வாய் பிரதோஷம் பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
4.) புதன் பிரதோஷம் நல்ல புத்திரபாக்கியம் தரும்.
5.) வியாழன் பிரதோஷம் திரு மணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.
6.) வெள்ளி பிரதோஷம் எதிரிகள், எதிர்ப்பு விலகும்.
7.) சனிப்பிரதோஷம் அனைத்து துன்பமும் விலகும்.
அபிஷேகப் பொருட்களின் நன்மைகள்
பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் நன்மைகள் இவையென்று சைவ அறிஞர்கள் கருதுகிறார்கள்:
- எண்ணெய் – சுகவாழ்வு
- சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்
- மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்
- பால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
- தயிர் – பல வளமும் உண்டாகும்
- தேன் – இனிய குரல் கிட்டும்
- பழங்கள் – விளைச்சல் பெருகும்
- பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்
- இளநீர் – நல்ல மக்கட்பேறு கிட்டும்
- சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்
- நெய் – முக்தி பேறு கிட்டும்