இன்டர்நெட் இல்லாமல் முகநூலை பயன்படுத்தலாம்; Bsnl-ன் புதிய திட்டம்

இணையதள இணைப்புக்கு செலவழிக்காமலே சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பயன்படுத்தும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வசதிக்கு இன்டர்நெட் அவசியம் இல்லை, இதன் மூலம் முகநூல் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், இந்த வசதியை 3ஜி வேகத்திற்கே நாம் பயன் படுத்திக்கொள்ளலாம். ஆனால், இந்த வசதியை உங்கள் மொபைல்களில் பெற கட்டணங்கள் செலுத்த வேண்டும்.
ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கென 3 நாட்களுக்கு 4 ரூபாயும், ஒரு வாரத்துக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிகின்றது. மேலும் 20 ரூபாய் செலுத்தினால் ஒரு மாதத்துக்கு ஃபேஸ்புக் பயன்படுத்தலாம் என்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.