ஜோதிட பாடங்கள் ( பாடம் : 04 )

இப்போது - இதை  மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 9 கிரகங்களுக்கு - 9 தசா. ஒவ்வொரு தசா விலும் - 9 புத்திகளும் வரும்.
 தசா நல்லா தசையாய் இருந்தாலும் , புக்தி அவருக்குப் பகையாய் இருந்தால் பலன்கள் , அந்த கால கட்டத்தில் நல்லதாய் இராது.   நல்ல சாலையில்  பயணம் போகிறோம்.. வழியில் குண்டும் , குழியுமாய் சில நேரம் படுத்தி எடுக்கும் அல்லவா? அதைப் போல. 
இதைப் பற்றி சிறிது விளக்கமாக பின்னால் , பார்த்துக் கொள்ளலாம்... சரியா?

நவகிரகங்களில் - சுப கிரகங்கள் , பாவ கிரகங்கள் என்று இரண்டு வகை உள்ளனர்.

குரு, சுக்கிரன், புதன் , சந்திரன் -  சுப கிரகங்கள்
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது - அசுப கிரகங்கள்.

சந்திரனைப் பொறுத்தவரை  - வளர் பிறை சந்திரன் மட்டுமே , முழு சுபர் ஆவார். தேய் பிறையில் இருந்தால் , அவர் அவ்வளவு நல்ல பலன்களை தருவது இல்லை.

சரி, இப்போது இன்னொரு விஷயமும் தெரிந்து கொள்ளுங்கள். மேல சொன்னது பொதுவான விதி. செவ்வாய் , சனி எல்லாம் பாவ கிரகங்கள் தான். அதுவே உங்களுக்கு அவர்கள் இலக்கின அதிபதிகளாய் இருந்தால் , என்ன செய்வது..? உயிர்  கொடுப்பவர்கள் ஆயிற்றே. அவர்களுக்கு நல்லது தான். ஆனால் இந்த தீய கிரகங்களின் பார்வை படும் இடங்கள், நல்ல பலன்களை தராது.. 

வளர் பிறை சந்திரன் , தேய் பிறை சந்திரன் என்று - ஒருவர் ஜாதகத்தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும்.. எப்படி?

மொத்தம் இருப்பது - 12 ராசிகள். நம் தமிழ் மாதங்களும் - 12 . எதாவது லிங்க் இருப்பது போல தெரிகிறதா?  எஸ்.. யு ஆர் ரைட் .
சித்திரை மாதம் பொறந்தாலே - சூரியன் , மேஷம் ராசிக்குள்ளே வர்றார் னு அர்த்தம். வைகாசி லெ - ரிஷபம். ஆனி யில்  - மிதுனம் ... இப்படியே ... பங்குனி - மாதத்தில் , மீனம் ராசியில் சூரியன் இருப்பார்.

ஜாதகத்தில், சூரியன் இருக்கிற ராசி இலிருந்து 1 முதல் ஏழு இடங்களில் இருந்தால் வளர்பிறை. ... எட்டில் இருந்து - 12 வரை - தேய் பிறை.. இப்போ இன்னொரு விஷயம் பிடிபடணுமே...!!  அதே தான்...  சூரியனுக்கு 1 ஆம் இடத்தில் - அதாவது சூரியனும், சந்திரனும் - சேர்ந்து ஒரே வீட்டில் இருந்தால் , அவர் அமாவாசையிலோ  , அமாவாசையை ஒட்டியோ பிறந்து இருப்பார்.  அதே போல - சூரியனுக்கு நேர் எதிரில் - ஏழாம் வீட்டில்  இருந்தால் - பௌர்ணமியை ஒட்டி பிறந்து இருப்பார்.

சித்திரை மாசம் - சூரியன் மேஷத்திலே ; அதுக்கு ஏழாம் வீடு என்ன..? துலாம் - அங்கே சந்திரன் சித்திரை நட்சத்திரத் தில் இருக்கும்போது , பௌர்ணமி யா இருக்கும்.

நம்ம மனசிலே பதிஞ்ச சில நாட்களைப் பாருங்க : 
வைகாசி - விசாகம் ;  ஆவணி - அவிட்டம் ; திருக் கார்த்திகை ; மார்கழி - திருவாதிரை ; தைப் பூசம்   ; மாசி -மகம் ..... இது எல்லாமே பௌர்ணமி தினங்கள். இந்த தினங்களில் சந்திரனும், சூரியனும் - ஒன்றை யொன்று நேர் எதிர் நோக்கி தழுவிக் கொண்டு இருப்பார்கள். 


ஒவ்வொரு கிரகமும் - ஒவ்வொரு வீட்டில் எத்தனை நாட்கள் இருக்கும் - ? எப்படி கணக்கு பார்க்கிறது..?  கீழே உள்ள அட்டவணையைப் பாருங்க..

சூரியன் - ஒரு மாதம்  - ஒரு ராசி னு பார்த்தோம்.. மொத்தம் 12 வீட்டுக்கும் , ஒரு வருடம் ஆகுது. கீழே பூமி னு போட்டு இருக்கோம் பாருங்க...
அதை பன்னி ரெண்டாலே    வகுத்தால் - ஒரு வீட்டுக்கு வரும்..
சந்திரன் - ஒரு நாளைக்கு ஒரு நட்சத்திரம் - so , இரெண்டே கால் நாளிலிருந்து - மூன்று நாள்கள் - ஒரு ராசிக்கு.
புதன் -( 88 / 12 )  - சுமார் 7 நாள்கள் / ஒரு ராசிக்கு 
செவ்வாய் - (687 /12 ) - சுமார் 57 நாட்கள் 
குரு - ஒரு ராசிக்கு  சுமார் - ஒரு வருடம்
சுக்கிரன் - சுமார் - 20 நாட்கள்
சனி - ராசிக்கு - சுமார் இரண்டரை வருடங்கள்
ராகு - கேது - சுமார் - ஒன்றரை வருடங்கள்.. 

இப்போ , பஞ்சாங்கப்படி - குரு - மீன ராசி இலே இருக்கிறார். இல்லையா? பன்னிரண்டு வருஷம் முன்னாலே - இதே மாதிரி - மீனம் ராசிலே இருந்து இருப்பார். (1999 , 1987 , 1975 இப்படி ) .. நீங்க பிறந்த வருஷம் உதாரணத்துக்கு - 1976 னு வைச்சுக்கோங்க.. அனேகமா அவர், மேஷம் ராசிலே இருக்கணும். இல்லை , மீனம் இலே இருந்து கெளம்ப ரெடி யா இருக்கணும். அதை விட்டுட்டு, கடகம், சிம்மம், துலாம் னு அவங்க சவுகர்யத்துக்கு போட்டு இருந்தா ... ஜாதகம் தப்பா எழுதி இருக்கிறாங்க னு அர்த்தம்..

இதே மாதிரி - சனி - ஒரு சுற்று முடிக்க 30 வருஷம் ஆகும். ராகு, கேது - 18 வருஷம் ஆகும். இப்போ அவங்க இருக்கிற ராசி பார்த்துக் கிட்டு , அதை யொட்டி அவங்க ஜாதகத்திலே இருக்கானு ஒரு தடவை , சரி பார்த்துக்கிட்டு -  பலன் சொல்லணும்.

சரி , இன்னொரு விஷயம் - ஜாதகம் பார்க்கிறப்போ , சில கிரகங்களுக்கு (வ)  அப்படின்னு போட்டு இருப்பாங்க.   அப்படினா வக்கிரம் னு அர்த்தம். அதாவது முன்னாலேயே போக வேண்டிய கிரகம் , கொஞ்சம் பின்னாலே சுத்த ஆரம்பிக்குதுன்னு பொருள். அந்த நேரத்திலே , அந்த கிரகங்களுக்கு - பலம் கம்மியா இருக்கும்.  பலன் அளிக்கும் 
 சூரியனுக்கு 6 , 7 , 8 ஆம் இடங்களில் வரும்போது - கிரகங்கள் (பொதுவா) வக்கிரம் அடையும்.  ராகு, கேது, சந்திரன் தவிர எல்லா கிரகங்களும் - வக்கிரம் அடையும்.

அதி சாரம் னு ஒன்னு இருக்கு. வக்கிரத்துக்கு நேர் எதிர். அதாவது ஒரு இடத்திலே நிக்க வேண்டிய கிரகம் , இன்னும் ஸ்டெப்  தாண்டி முன்னாலே  போகிறது. போன தடவை , கும்பத்திலே நிற்க வேண்டிய குரு - மீனத்துக்கு அதி சாரம் ஆனார். திரும்ப கும்பத்துக்கு  - சிறிது நாட்கள் வக்கிரமானார். ... அப்போ சூரியனுக்கு 6 ,7 ,8 இடங்களில் இருந்திருப்பார்.

சரி, மேலே சொன்ன பாடங்கள் புரியுதா உங்களுக்கு .....? 

இன்னைக்கு - மேலும் ரெண்டு பாடங்கள் எழுத முடியும் னு நெனைக்கிறேன்... பார்க்கலாம்...

இதுக்கு மேல நாம் பார்க்க விருப்பது -  கிரகங்களின் காரகத்துவம், கிரகங்களின் பார்வைகள் , .... அப்புறம்.... 12 வீடுகளின் அமைப்புகள்..

இந்த ரெண்டும் தெரிஞ்சுகிட்டா, உங்களுக்கு எந்த கேள்விக்கு என்ன என்ன பார்க்கணும் ? அப்படி னு தெரிய வரும்...
தினசரி யிலோ, இல்லை நாட்காட்டிகளிலோ, கிரகம் எங்கே எங்கே இருக்கு னு பார்த்து தெரிஞ்சுக்கலாம். ஒரு பாவ கிரகம்,  வில்லங்கமா உட்கார்ந்து இருக்குதுனா, அப்போ நீங்க ஜாக்கிரதையா, அடக்கி வாசிக்கணும்னு அர்த்தம்..